கால நிலை-07.01.2026 இரவு 7.45 மணி
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் "ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக" வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வருகின்றது. தொடர்ச்சியாக வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது புயலுக்கு முந்திய நிலைமையாகும்.
தற்போது இதன் மையம் அதிக சுழற்சியை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றது.
எனவே இது அடுத்த கட்ட தீவிரத்தை அடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கிழக்கு, ஊவா, மத்திய, வட மத்திய தென் மாகாணங்களுக்கு கிடைத்து வரும் மழை நாளை முதல் இன்னமும் தீவிரம் பெறும். செறிவடையும்.
வடக்கு மாகாணத்தின் ஒரு சில பகுதிகளில் கிடைத்து வரும் மழை நாளை பல பகுதிகளுக்கும் பரவலடையும், செறிவடையும் அத்தோடு தீவிரமும் பெறும்.
படிப்படியாக காற்றின் வேகமும் அதிகரிக்கும்.
ஆகவே இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மக்கள் அவதானமாக இருப்பதோடு, இந்த அதி தீவிர வானிலை நிலைமை தொடர்பாக உரிய அதிகாரிகளும் முன்கூட்டியே செயற்படுவது சிறந்தது.
நாகமுத்து பிரதீபராஜா
2026.01.07 සවස 7.45
බෙංගාල බොක්කෙහි ශ්රී ලංකාවට ගිනිකොන දෙසින් පැවති අඩු පීඩන කලාපය "ගැඹුරු පීඩන අවපාතයක්" දක්වා ශක්තිමත් වී ඇත. එය තවදුරටත් ශක්තිමත් වෙමින් පවතී. එය අඛණ්ඩව වයඹ දෙසට ගමන් කරයි.
ගැඹුරු පීඩන අවපාතයක් යනු පූර්ව සුළි කුණාටු තත්වයක්.
වර්තමානයේ එහි කේන්ද්රය වැඩි සංසරණයක් අවශෝෂණය කරමින් සිටී.
එබැවින්, එය තීව්රතාවයේ ඊළඟ අදියර කරා ළඟා වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
නැගෙනහිර, ඌව, මධ්යම, උතුරු මැද සහ දකුණු පළාත්වල දැනට ලැබෙන වර්ෂාව හෙට සිට තීව්ර වනු ඇත. එය තීව්ර වනු ඇත.
උතුරු පළාතේ ප්රදේශ කිහිපයකට ලැබෙන වර්ෂාව හෙට දින බොහෝ ප්රදේශවලට පැතිරී, සාන්ද්රණය වී තීව්ර වනු ඇත.
සුළං වේගය ක්රමයෙන් වැඩි වනු ඇත.
එබැවින්, මෙම තත්වයන් සලකා බලා, ජනතාව විමසිලිමත් වීම සහ අදාළ බලධාරීන් මෙම අතිශය දරුණු කාලගුණික තත්ත්වය සම්බන්ධයෙන් කල්තියා ක්රියා කිරීම වඩා හොඳය.
නාගමුතු ප්රදීපරාජා
